FLASH NEWS
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவு சேலம் சங்ககிரி பகுதியில் கடந்த ஒரு வருடமாக இரவு நேரத்தில் உலா வந்த ஆண் சிறுத்தை அடையாளம் தெரியாத வாகன மோதி பலி திங்கட்கிழமை (11.05.2026) முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இதர குறைத்தீர்க்கும் கூட்டங்களும் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற உள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தகவல்

அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு பெருந்துறையில் பிரச்சாரம்

Posted on March 08, 2026 by Gopal
அரசியல்
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  ஈரோடு பெருந்துறையில் பிரச்சாரம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி , 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாக கொண்டு தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக 'புரட்சித் தமிழரின் எழுச்சிப்பயணம்' என்ற தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி 74-ஆம் நாளான இன்று (08.03.2026), 192-வது சட்டமன்ற தொகுதியாக, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதி, தாய்நகர் எதிரில் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts