FLASH NEWS
சாலையோர மரங்களை காக்க களமிறங்கிய வீ தி லீடர்ஸ்! மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள், விளம்பரத் தட்டிகள் அகற்றம் — ஈரோட்டில் இயற்கைப் பாதுகாப்புப் பணி தொடக்கம். தேசியக் கொடியுடன் 15.5 கி.மீ. தொடர் ஓட்டம் I-Fit Club சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழிப்புணர்வு ஓட்டம் – 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ஈரோடு மாவட்டத்தில் கிரைம் கண்ட்ரோல் சமிதி சார்பில் 80 வது சுதந்திர தினம் கொண்டாட்டம். ஈரோடு மாநகராட்சி, ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு - DRUG FREE TAMIL NADU" - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோட்டில் இலட்சிய ஜனநாயக கட்சியின் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் -கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தகவல்

Posted on January 07, 2026 by Gopal
அரசியல்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தகவல்
பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3000/- வழங்குவது தொடர்பாக புகார்கள் ஏதேனுமிருப்பின் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் மற்றும் 0424-2252052 தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்.

ஈரோடு மாவட்டஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தகவல்-

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை எதிர்வரும் 15.01.2026 -ஆம் தேதியன்று சிறப்பாக கொண்டாடும் விதமாக பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ மற்றும் முழுக் கரும்பு 1 ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3000/- அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3000/- பெறுவதற்கு பகுதி வாரியாக டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன்கள் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் 08.01.2026 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். இப்பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3000/- வழங்குவது தொடர்பாக புகார்கள் ஏதேனுமிருப்பின் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் மற்றும் 0424-2252052 தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். மேற்காணும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.3000/-ஐ பெற்று குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts