FLASH NEWS
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவு சேலம் சங்ககிரி பகுதியில் கடந்த ஒரு வருடமாக இரவு நேரத்தில் உலா வந்த ஆண் சிறுத்தை அடையாளம் தெரியாத வாகன மோதி பலி திங்கட்கிழமை (11.05.2026) முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இதர குறைத்தீர்க்கும் கூட்டங்களும் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற உள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தகவல்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தகவல்

Posted on January 07, 2026 by Gopal
அரசியல்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தகவல்
பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3000/- வழங்குவது தொடர்பாக புகார்கள் ஏதேனுமிருப்பின் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் மற்றும் 0424-2252052 தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்.

ஈரோடு மாவட்டஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தகவல்-

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை எதிர்வரும் 15.01.2026 -ஆம் தேதியன்று சிறப்பாக கொண்டாடும் விதமாக பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ மற்றும் முழுக் கரும்பு 1 ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3000/- அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3000/- பெறுவதற்கு பகுதி வாரியாக டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன்கள் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் 08.01.2026 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். இப்பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3000/- வழங்குவது தொடர்பாக புகார்கள் ஏதேனுமிருப்பின் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் மற்றும் 0424-2252052 தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். மேற்காணும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.3000/-ஐ பெற்று குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts