FLASH NEWS
வீரப்பன்சத்திரம் திமுக பகுதி கழகத்தின் சார்பாக சமத்துவ பொங்கல், கோல போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் -அமைச்சர் சு.முத்துசாமி பரிசு வழங்கி சிறப்பித்தார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தகவல் ஈரோடு மாநகராட்சியில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம். ஈரோடு பெரிய மாரியம்மன் திருக்கோயில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்‌.பி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் , பக்தர்களுக்கு சக்கரை பொங்கல் வழங்கும் நிகழ்வு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி அறிக்கை

ஈரோடு மாணவர்கள் தேசிய கராத்தே போட்டியில் சாதனை

Posted on November 20, 2025 by Admin User
அரசியல்
ஈரோடு மாணவர்கள் தேசிய கராத்தே போட்டியில் சாதனை
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், 2025 நவம்பர் 15 முதல் 18 வரை நடைபெற்ற 1st சி.பி.எஸ்.சி கராத்தே நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரோடு மாணவர்கள் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250-க்கும் அதிகமான பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த ஈரோடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதன்முறையாகப் பங்கேற்றுத் தங்கள் திறமையை நிரூபித்தனர்.
7-ஆம் வகுப்பு மாணவர் நிதீசன் வெள்ளிப் பதக்கமும் அதே வகுப்பைச் சேர்ந்த கபிலன் வெண்கலப் பதக்கமும் வென்று தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்தனர்.


இந்தச் சிறப்பான வெற்றி, ஈரோடு பப்ளிக் பள்ளி நிர்வாகத்திற்கும், கராத்தே விளையாட்டுக்கும் ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.


தேசிய அளவில் பதக்கம் வென்ற இந்த இளம் வீரர்கள் ஈரோடு திரும்பியபோது, ரயில் நிலையத்தில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிய நடுவரான கராத்தே பயிற்சியாளர் சுரேஷ் தலைமையில், பெற்றோர்கள், சக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து வீரர்களைப் பாராட்டினர். பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, வெற்றி பெற்ற மாணவர்களை மனதார வாழ்த்திப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!